Subscribe:

எட்டுப்பேரப் பிள்ளைகளைக்கண்ட பிரித்தானியப் பெண் தனது 50 ஆவது வயதில் 4 பிள்ளைகளைப் பெறப்போகிறார்.

பிரித்தானியாவில் வாழும் பெண் தனது 50 ஆவது வயதில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளைப் பெறப்போகும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறப்போகிறார்.

ஏற்கனவே 3 பிள்ளைகளுக்குத்தாயான இவர் அவர்கள் மூலம் பிறந்த 8 பேரப்பிள்ளைகளைக் கண்டுள்ளார். 




Tracey Britten என்ற பெண் IVF எனப்படும் செயற்கைக் கருத்தரித்தல் மூலம் தனது இரண்டாவது கணவரின் விந்தைக் கொண்டு நான்கு குழந்தைகளைப் பெறவுள்ளார்.

இவரின் இந்த முயற்சி சாத்தியமற்றது என மருத்துவர்கள் முதலில் கூறியிருந்தனர். 


ஆனால் கரு முட்டைகள் 4 ஐக் கொண்டு இவர் ஒத்த இரட்டையர்களாக இரு பெண் குழந்தைகள்  மற்றும் ஒரு ஆண் குழந்தை ஒரு பெண்  குழந்தை  என மொத்தமாக நான்கு குழந்தைகள் கருவாகியுள்ளன. 

மருத்துவர்கள்  28 வாரங்கள் கூட அவை நீடிக்காது எனப் பின்னர் தெரிவித்தாலும் தற்போது இப்பெண் தனது 30 ஆவது வாரக் கருவைச் சுமக்கின்றார்.
2018 நவம்பர் மாத முற்பகுதியில் இவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் கிடைக்கவுள்ளன.

தற்போது வாராவாரம் அவருக்கான கண்காணிப்புக்கள் செய்யப்படுகின்றன.



தற்போது 


No comments:

Post a Comment

கருத்துக்கள்..